கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து கொலை.. கள்ளக் காதலனை நிரந்தரமா அனுபவிக்க மனைவி செய்த கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 8:58 AM IST
Highlights

கள்ளக்காதலனுக்காக மனைவி கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கொடூரம் நடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கள்ளக்காதலனுக்காக மனைவி கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கொடூரம் நடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத கணவனோ மனைவியோ மூன்றாவது உறவைத் தேடி செல்லும்போது, அது கள்ளக்காதலுக்கு வழிவகுக்கிறது. இது ஒரு கட்டத்தில்  திருமணபந்தத்தையே சிதைத்துவிடுகிறது, இறுதியில் அது கொலையிலோ தற்கொலையிலோ முடிகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போதிய சட்ட திட்டங்கள் இல்லாத காரணத்தால், இது போன்ற சம்பவங்கள் நாட்டில் பரவலாக அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இருவரின் தனிப்பட்ட மிகிழ்ச்சிக்கான இந்த உறவு  ஒட்டுமொத்த குடும்பத்தின் மானத்தையும் காற்றில் பறக்க விடுகிறது.

இந்த வரிசையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மோரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விபரம் பின்வருமாறு, ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா  மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம்  கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ், இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி  கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட லட்சுமிக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதையுப் படியுங்கள்: கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, இந்நிலையில் கணவன்மீது மனைவி வெங்கட லட்சுமிக்கு நாட்டம் குறைந்தது, அதே பகுதியை சேர்ந்த உசிறி  ஸ்ரீனிவாஸ் என்பவர் மீது வெங்கடலட்சுமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது வெங்கட லட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட லட்சிமி, இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினார்.

எனவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதனால் கடந்த  ஜூன் 1ஆம் தேதி கணவனுக்கு மோரில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார், மோர் குடித்து விட்டு உறங்கச் சென்ற கணவன் தூக்கத்திலேயே உயிரிழந்தார். காலையில் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மனைவி வெங்கடலட்சுமி கதறினார், இதை உண்மை என்று சுப்பாராவின் உறவினர்களும் நம்பினர். ஆனால் கணவன் உயிரிழந்த மூன்றே மாதங்களில் வெங்கடலட்சுமி அதிக மகிழ்ச்சியாக இருந்தார்.  சீனிவாஸ்வுடன் முன்பைவிட அதிக நெருக்கம் காட்டத் தொடங்கினார்.

இதையுப் படியுங்கள்: பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்.. நடுரோட்டில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக வீட்டுக்கு விரட்டிவிட்ட கொடூரம்.!

இந்நிலையில்தான் சுப்பாராவின் குடும்பத்தாருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது,  தங்களது மகனை வெங்கடலட்சுமி கொலை செய்திருக்கக் கூடும் என சுப்பராவின் பெற்றோர் சந்தேகித்தனர். இதையடுத்து  வெங்கடலட்சுமி மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வெங்கடலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து  விசாரித்தனர். விசாரணையில் வெங்கடலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக தகவல்  கொடுத்தார். இதில் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது, பின்னர் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலனுக்காக, கணவனுக்கு மோரில் தூக்க மாத்திரை கொடுத்து கொன்றதை வெங்கடலட்சுமி ஒப்புக்கொண்டார். பின்னர்  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 
 

click me!