கள்ளக் காதலனுடன் நிர்வாணக் கோலத்தில் உல்லாசமாக இருந்த மனைவி! நேரில் பார்த்த கணவன் வெறிச்செயல்...

By sathish kFirst Published Apr 16, 2019, 8:13 PM IST
Highlights

தனது மனைவி வேறொரு ஆணுடன் மனைவி  ஜாலியாக உல்லாசமாக இருப்பதை நேராக பார்த்துவிட்ட கணவன், மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலனின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவி வேறொரு ஆணுடன் மனைவி  ஜாலியாக உல்லாசமாக இருப்பதை நேராக பார்த்துவிட்ட கணவன், மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலனின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வயது 28. சிலிண்டர் போடும் வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 7 மாசத்துக்கு முன்பு வெறும்19 வயதான நிவேதா என்ற பெண்ணுடன் கல்யாணம் நடந்தது.   

வேலை முடிந்து நேற்றிரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார் முனியப்பன். அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு இளைஞரோடு நிர்வாணக் கோலத்தில் வேறொரு இளைஞருடன் ஜாலியாக உல்லாசம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனார் கணவர் முனியப்பன். உடனே கள்ளக் காதலன் தப்பி ஓடிவிட்டார், இதனையடுத்து நிவேதாவும் முனியப்பனும் சண்டை போட்டனர். 

ஒரு கட்டத்தில் முனியப்பன் நிவேதாவிடம்,  இனி உன்னோடு வாழ முடியாது வா.. நான் உன்னை உங்க அம்மா வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்லி பைக்கில் அழைத்து சென்றார். எருக்காட்டு வலசு பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது திரும்பவும் சண்டை ஆரம்பமானது. 

இதனால் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த முனியப்பன், தன்னிடமிருந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்தார். இதில் தலை தனியாக துண்டாகி விழுந்தது. பிறகு அந்த தலையை எடுத்து பைக்கின் முன் பக்கம் வைத்து கொண்டார். உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி வைத்து விட்டார். இப்படியே பைக்கை படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். 

இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். பைக்கில் வேகமாக வந்த முனியப்பன் சுவரின் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவருடன் சேர்ந்து பைக்கில் இருந்த மண்ணைவி நிவேதாவின் முண்டமான உடலும், தலையும் தனித்தனியாக உருண்டு விழுந்தன. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த பெருந்துறை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!