பல பெண்களுடன் உல்லாசம்.. மனைவியுடன் படுக்கையில் இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கொடூர கணவர்..!

By vinoth kumarFirst Published Jan 23, 2023, 2:26 PM IST
Highlights

பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்த கோனேரிப்பாளையத்தை சேர்ந்தவர் விமல்(31). இவருக்கும் ஹோமியோபதி பெண் டாக்டருக்கும் கடந்த 2021 செப்டம்பர் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன்பிறகு தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

 உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்த கோனேரிப்பாளையத்தை சேர்ந்தவர் விமல்(31). இவருக்கும் ஹோமியோபதி பெண் டாக்டருக்கும் கடந்த 2021 செப்டம்பர் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன்பிறகு தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அத்துடன் மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் போது அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- தனிமையில் பேசிய காதல் ஜோடி.! காதலனை மிரட்டி காதலியை கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்

மேலும் வரதட்சணை மற்றும் பணல் கேட்டு விமல் தொந்தரவு செய்துள்ளார்.  இதற்கு விமலின் பெற்றோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக  உல்லாச காட்சியை காண்பித்து மனைவியை மிரட்டியுள்ளார். கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவருக்கு தெரியாமல் கணவரின் செல்போனை எடுத்து பார்த்த போது மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த போது இடையூறு.. ஆத்திரத்தில் குழந்தை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன்

அதில், கணவர் விமல்  பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து மனைவி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை அடுத்து அவரது கணவர் விமலை கைது செய்தனர். 

click me!