மருந்து கொடுப்பதாக தனி அறைக்கு அழைத்துச் சென்று மூதாட்டியுடன் உல்லாசம்.. 23 வயது சைகோ இளைஞன் கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2022, 4:02 PM IST
Highlights

இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞன், அந்த மூதாட்டியை பாலியல் வன்புணர்வு  செய்துள்ளார். 

23 வயது இளைஞன் ஒருவன் 58 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்ச சம்பவத்தில் போலீசார் இளைஞனை பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நிலையில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இக் குற்றத்தை தடுக்க எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் மாவட்டத்தில் மூதாட்டியை இளைஞன் பாலியல் விழிப்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு 58 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அந்த பெண்மணி தனிமையில் இருந்தார்.

அதைப்பார்த்து காமவெறி பிடித்த 23 வயது இளைஞர், அந்த பெண்மணியை அடைய திட்டமிட்டார், அப்போது அந்த பெண்மணியிடம் நெருங்கி உங்களுக்கு மருந்து கொடுக்கட்டுமா என கூறி மருத்துவமனையில் ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், அதை நம்பி சென்ற மூதாட்டியை அந்த வாலிபர் யாரும் இல்லாத தனி அறைக்கு அழைத்துச் சென்று மூதாட்டியின் வாயை துணியால் பொத்தியதுடன், சத்தமிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது. பின்னர் மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞன் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானார். இதனையடுத்து அலறியடித்து வெளியில் ஓடி வந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறினார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞன், அந்த மூதாட்டியை பாலியல் வன்புணர்வு  செய்துள்ளார். இது குறித்து பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் ஏன் மருத்துவமனை ஊழியர்களோ, அல்லது செவிலியர்களோ இல்லை, ஏன் அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் இல்லை என மருத்துவமனையை நிர்வாகத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் மூதாட்டியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் மருத்துவமனை ஊழியரா அல்லது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் ஸ்ரீகாந்த் (23) என்பதும், வேலை எதுவும் இல்லாததால் மதுவுக்கு அடிமையான அந்த இளைஞன் இந்த கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் நிர்வாகத்தை பொதுமக்கள் கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பிட்ட மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்தவும், மருத்துவ மனைக்கு வரும் பெண்களில் பாதுகாப்பு உறுதி செய்யவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

click me!