பொள்ளாச்சியை போன்று மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம்... பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த பள்ளி மாணவி..!

Published : Apr 15, 2019, 06:01 PM ISTUpdated : Apr 15, 2019, 06:07 PM IST
பொள்ளாச்சியை போன்று மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம்... பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த பள்ளி மாணவி..!

சுருக்கம்

திருவாரூர் அருகே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, ஒருவர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்து வீட்டில் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருடைய பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தனர். 

இதை அறிந்த அதே பகுதியைச்  சேர்ந்த தாஸ், விஜய், அஜித், முருகேஷ் ஆகிய 4 பேரும்  மது போதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு
கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி தாக்கி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

இதனையடுத்து தனது பெற்றோர் வந்ததும், நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், அவர்கள் கண்முன்னே தனது உடலில் மண்ணெண்ணெயை  ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து மாணவியின் தந்தை கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாஸ் (வயது21), அஜித்(19), விஜய் (20), முருகேசன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவந்தது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள 4 பேரை போலலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்