கணவன் இல்லாதபோது வேலைக்காரனுடன் அடிக்கடி உல்லாசம்.. மருமகளை அந்த கோலத்தில் பார்த்த மாமனார்.. நடந்த பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 11:35 AM IST
Highlights

ஆனால் அதையும் மீறி அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனி அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர் அப்போது அதை மாமனார் ரமணய்யா நேரில் பார்த்துவிட்டார்.  

கணவன் இல்லாதபோது வீட்டு வேலைக்காரனுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த மருமகளை மாமனார் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதில்  கள்ளக் காதலனையும் மாமனார் கொலை செய்தார். இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்ததை கண்ணால் கண்ட மாமனார் ஆத்திரத்தில் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாளேடுகளை புரட்டினாலேயே கள்ளக்காதல் சம்பவங்களும் அதனால் ஏற்படும் கொலைகள் குறித்த செய்திகளே அதிக அளவில் ஆக்கிரமித்து இருப்பதைக் காண முடிகிறது. அந்த அளவிற்கு கள்ளக் காதலர் மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு பின்னணியில் கள்ளக்காதல் இருந்து வருவதே அதிர்ச்சியளிக்க கூடிதாயக உள்ளது. 

இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது ஆந்திர மாநிலம் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி நகர் சேர்ந்தவர் மளிகார்ஜுனா, முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி சின்னிலா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த சந்தா ஒபுலேஸ்  என்ற  நபர் மல்லிகார்ஜுனாவின் வீட்டில் வேலை செய்து வந்தார். இதில் அடிக்கடி மல்லிகார்ஜுனா ஆத்மபூர் மண்டலத்தின் உள்ள சித்தராமபுரத்திலுள்ள முதல் மனைவியை பார்க்க செல்வது வழக்கம், அப்போது இரண்டாவது மனைவி சின்னிலாவுக்கும் வேலைக்காரன்  ஒபுலேஸ்க்கும் இடையே உறவு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்கள் விவகாரம் மாமனார் ரமணய்யாவுக்கு தெரிந்தது. இந்நிலையில் தனது இரண்டாவது மருமகள் சின்னிலாவையும் வேலைக்காரன் ஒபுலேஸ்சையும்எச்சரித்து வந்தார். 

ஆனால் அதையும் மீறி அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனி அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர் அப்போது அதை மாமனார் ரமணய்யா நேரில் பார்த்துவிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால்  மருமகள் சின்னிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஒபுலேஸ்சையும் குத்தி கொலை செய்தார். பின்னர் இது காவல் துறைக்கு தெரிந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மாமனார் ராமணய்யா தலைமறைவானார். மகன் இல்லாத நேரத்தில் மருமகன் வேறொரு ஆணுடன் உடலுறவு ஈடுபட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந மாமனார் மருமகளையும் கள்ளக்காதலனையும் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!