கள்ளக் காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. கணவனுக்கு சாப்பாட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 7:27 PM IST
Highlights

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது  செய்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது  செய்தனர். கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பெரும்பாலான கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறுகிறது. திருமண வாழ்க்கையில் திருப்தி அடையாத பெண்கள் விவாகரத்து அல்லது கள்ளக்காதலை நோக்கி தள்ளப்படும் ஆவலாக பரவலாக நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் லால் சோட்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாந்த் சென்  கிராமத்தில் ஓம் பிரகாஷ் குர்ஜார் என்பவருக்கும் ரெஸ்டா என்பவருக்கும்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.  

இந்நிலையில் ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் மனைவி ரெஸ்டாவுக்கு பின்டு என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது பின்னர் நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மனைவியின் பழக்கவழக்கம் கணவனுக்கு தெரிந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் மனைவி ரெஸ்டா, இந்நிலையில் கொலை நடந்த அன்று ஓம் பிரகாஷின் தந்தை உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மனைவி ரெஸ்டா கள்ளக்காதலன் மூலம் தூக்க மாத்திரைகளை வாங்கி வந்தார்.

அன்று இரவு கணவனுக்கு வகைவகையாக உணவு சமைத்தார், அந்த மாத்திரைகளை அதில் கலந்து தனது கணவருக்கும், மாமியாருக்கும் கொடுத்தார். சாப்பிட்டு இருவரும் சிறிது நேரத்தில் மயங்கினர். பின்னர் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கடுமையாகத் தாக்கி கொலை செய்தார். இலைகள் ஓம் பிரகாஷ் சந்தேகத்துக்கு இடமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது மனைவி மற்றும் தாயாரை விசாரித்தனர். அப்போது அவர்களது வீட்டில் சமையலறையில் போதை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஓம் பிரகாஷின் தாயார் தனது மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.

வழக்கமாக காலையில் எழுந்திருக்கும் தன்னால் எழுந்திரிக்க முடியவில்லை, தனது மருமகள் உணவில் எதோ கலந்து கொடுத்து இருக்க கூடும், வழக்கத்துக்கு மாறாக மருமகள் எனது மகனுக்கு நேற்று இரவு உணவை ஊட்டி விட்டார் என போலீசிடம் கூறினார். நிலையில் மருமகள் ரெஸ்டாவிடம் தனியாகச் போலீசார் விசாரணை நடத்தியதில், கணவனுக்கு உணவில் தூக்கமாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 

click me!