தந்தையின் இரண்டாவது மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்.. சித்தியின் கர்ப்பத்தை மறைக்க எடுத்த பயங்கர முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 12:59 PM IST
Highlights

இந்த விஷயம்  தனது தந்தைக்கு தெரிந்தால் விஷயம் விவகாரமாக மாறிவிடும் என்று அஞ்சிய தன்வீந்தர் அந்தப் பெண்ணை விருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி குடிக்க மாது வாங்கி கொடுத்ததுடன், 

தந்தையின் இரண்டாவது மனைவியுடன் மகன் உல்லாசத்தில்  ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அந்த பெண் கர்பமான நிலையில் அவளை அடித்து அந்த இளைஞர் அடித்து கொலையும் செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது. 

நாட்டில் ஒரு பக்கம் மக்கள் கல்வி, அறிவியல் வளர்ச்சி என மேலோங்கி வரும் நிலையில், மறுபுறம் பண்பாடு கலாச்சாரம் மறந்து இளைஞர்கள் படு மோசமான செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அரியானா மாநிலம் குருகிராம் அருகில் தந்தையின் இரண்டாவது மனைவியுடன் மகன் கள்ள உறவு  வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் குருகிராம் நகரைச் சேர்ந்தவர் மன்விந்தர் சிங் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரின்  முதல் மனைவி இறந்த நிலையில், மூத்தமகன் தேவேந்திர சிங் பணி நிமித்தமாக டெல்லியில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் உடன் இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் ரேச்சரல் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்  மன்விந்தர். அவர் திருமணம் செய்து கொண்ட ரேச்சல் உள்ளூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன்வீந்தர் சிங்கின் இரண்டாவது மகன் தன்வீந்தர் சித்தி ரேச்சலை அன்றாடம் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் சென்று வந்தார். நிலையில் ரேச்சலுக்கு இளம் வயது என்பதால், அவரது வயதான கணவரால் அவளின் உடல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் இளமையில் வாடிய ரேச்சலுக்கும் கணவரின் இரண்டாவது மகன் தன்வீந்தருக்கும் இடையே இனம்புரியாத காதல் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவத்து வந்தனர். இதில் அந்தப் பெண் கர்ப்பமானார். 

இந்த விஷயம்  தனது தந்தைக்கு தெரிந்தால் விஷயம் விவகாரமாக மாறிவிடும் என்று அஞ்சிய தன்வீந்தர் அந்தப் பெண்ணை விருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி குடிக்க மாது வாங்கி கொடுத்ததுடன், ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று சித்தி ரேச்சலை கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், அருகில் இருந்த குளத்தில்  விசினார். இந்நிலையில் தனது மாற்றாந்தாய் காணாமல் போனதாக கூறி போலீசில் புகார் கெடுத்தார். இந்நிலையல் அது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீரென தன்வீந்தர் தலைமறைவானார். இதில் குற்றத்திற்கு காரணம் தன்வீந்தர்தான் என்பதை உணர்ந்த போலீசார் தன்வீந்தரை கைது செய்துள்ளனர். 

click me!