திருமணம் ஆகியும் கள்ளக் காதலியை பிரிய மனமில்லை.. கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசிபோட்ட கொடூர கணவன்..

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2021, 3:51 PM IST
Highlights

இந்நிலையில் மகேஸ் கவுதம் கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுடனான உறவை துண்டிக்க வேண்டும் என மனைவி வற்புறுத்தி வந்தார்.

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி ஊசி செலுத்தியுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி கர்ப்பமாக இருந்துவரும் நிலையில் கணவனின் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கணவனுக்கு எதிராக பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தல், காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, வரதட்டசனை கேட்டு கட்டிய மனைவியை அடித்து துன்புறுத்துவது என பல வகையிலான கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வருகிறது. 

இந்த வரிசையில் தனது கள்ளக்காதலிக்காக காட்டிய மனைவிக்கு  கணவன்- எச்ஐவி ஊசி செலுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது, உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகேஷ் கௌதம் என்பவர் ஆய்வகத்தில் ஒப்பந்த தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு  முன்பிருந்தே சிலவருடங்களாக தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் மகேஷ் கௌதமுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்நிலையில் மகேஸ் கவுதம் கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுடனான உறவை துண்டிக்க வேண்டும் என மனைவி வற்புறுத்தி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மகேஷ் கவுதம், மருத்துவமனையில் பணியாற்றும் காரணத்தால் அங்கு எச்ஐவி நோயாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன ஊசியை தனது மனைவிக்கு செலுத்தினார் மகேஸ். கணவனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது குடும்பத்தாரின் உதவியுடன் அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் கர்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார் கணவன் மகேஷ் கௌதம், மற்றும் அவர் பணியாற்றும் மருத்துவமனை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மகேஷ்குமார் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். 

 

click me!