மாஜி அமைச்சர் கொலையில் தொடர்பு?கோர்ட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை

Published : Dec 13, 2022, 09:13 AM ISTUpdated : Dec 13, 2022, 09:15 AM IST
மாஜி அமைச்சர் கொலையில் தொடர்பு?கோர்ட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை

சுருக்கம்

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (32). பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய பிரபல ரவுடியை பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (32). பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,  புதுக்கோட்டையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இளவரசனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளவரசன் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க;- ஒரே இரவில் இரண்டு முறை உல்லாசத்துக்கு அழைத்த கணவர்.. மறுத்த மனைவி.. காமவெறியில் நடுஇரவில் நடந்த பயங்கரம்.!

வழக்கம்போல் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தை பார்த்தும் மற்றவர்கள் உயிர் பயத்தில் தப்பித்தனர். ஆனால், இளவரசனை சுத்துபோட்டு தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து, கொலைசெய்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க;-  பசங்க எல்லாம் பெருசா ஆயிட்டாங்க! கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரம்! கள்ளக்காதலி, மகளை துடிக்க வைத்த கொடூரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!