2 பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி துடிதுடிக்க கொன்ற தாய்.. அதிர வைக்கும் காரணம்..!

Published : May 18, 2022, 12:57 PM ISTUpdated : May 18, 2022, 01:08 PM IST
2 பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி துடிதுடிக்க கொன்ற தாய்.. அதிர வைக்கும் காரணம்..!

சுருக்கம்

செல்போன் மூலம் கணவரை வீட்டிற்கு வருமாறு பஞ்சவர்ணம் அழைத்துள்ளார். வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தனது 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் பொன்னடைக்கன்(28). பொள்ளாச்சியில் தேங்காய் மண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (21). இவர்களுக்கு ஜெகதீசன் (2) என்ற மகனும், 8 மாதத்தில் தக்‌ஷியா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், பொன்னடைக்கன் குடிப்பழக்கம் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊர் திருவிழாவுக்காக பொன்னடைக்கண் சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாய் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

அப்போது அங்கு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி இரவு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கும் அவர்களிடையே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரத்துடன் பொன்னடைக்கன் வெளியே சென்று விட்டார். இதையடுத்து செல்போன் மூலம் கணவரை வீட்டிற்கு வருமாறு பஞ்சவர்ணம் அழைத்துள்ளார். வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

ஆனால் அவர் வரவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார்.  இந்த தகவலை தனது தாய்க்கு போனில் கூறியுள்ளார். இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற பஞ்சவர்ணத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!