சினிமா துறையினருடன் உல்லாசமாக இருந்ததால் பீஸ் பீஸாக வெட்டி வீசினேன்... கணவர் பகீர் வாக்குமூலம்!!

By sathish kFirst Published Feb 7, 2019, 11:25 AM IST
Highlights

சினிமா துறையைச் சேர்ந்தவர்களுடன் உல்லாசமாக வாழ்ந்ததால், மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக கணவர் பாலா கிருஷ்ணா பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவி சந்தியாவை கொடூரமாக துண்டு துண்டாக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலத்தில்; தூத்துக்குடி மாவட்டம், டூவிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்,  சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் ஆசை இருந்ததால்  சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார்.  இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்துள்ளார்.  

அடுத்த சில வருடங்களில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியிலிருந்து சந்தியா என்பவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது தயாரிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணனை சந்தித்தார். சந்தியாவின் அழகில் மயங்கிய பாலகிருஷ்ணன் அவருக்கு சில படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்து, சந்தியாவுக்கும் பாலகிருஷ்ணன் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் வெளிப்படுத்த வில்லை. அடிக்கடி போனில் மட்டும் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பாலகிருஷ்ணன் தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்துள்ளார். அதை சந்தியாவும் ஏற்றுக்கொண்டார். பிறகு இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்ட இவர்களுக்கு மாயவர்மன் என்ற மகனும் யோகயாத்ரா என்ற மகளும் உள்ளனர். சந்தியாவுக்கும் திரைத்துறையில் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், கல்யாணத்திற்கு பின் படங்களிலும் நடிக்க கூடாது என்று பாலகிருஷ்ணன் தடை போட்டதால், சந்தியாவுக்கு கணவர் மீது வருத்தம் இருந்தது.

இதனைத் தொடர்ந்து சந்தியா கிரியேஷன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி “காதல் இலவசம்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். ஆனால் அந்த படம் ஓடாததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகு, சொந்த ஊரில் உள்ள சில இடங்களை விற்று அந்த பணத்தை வைத்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார்.  இதனால், பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சினிமா இயக்குநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வந்து செல்வது வழக்கம். 

இதற்கிடையே, வீட்டிற்கு வந்து செல்லும் தொழிலதிபர் ஒருவருடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பாலகிருஷ்ணன் பாமகவில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்ததால் அடிக்கடி தூத்துக்குடிக்கு சென்று வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தியா தொழிலதிபரான தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த கள்ளக் காதல் மேட்டர் தெரியவந்ததால். சந்தியாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொழிலதிபர் பேச்சைக் கேட்டு சந்தியா  என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சந்தியா மீது அளவில்லா காதலால் எனக்கும் விருப்பமில்லை. ஆனாலும்  நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், என்னை விட்டு பிரிந்து சொந்த ஊருக்கு சென்ற அவர்,  சில வாரங்களுக்குப் பின் அதன்பிறகு சந்தியா சினிமாவில் நடிக்க முடிவு செய்து சென்னைக்கு வந்த அவருக்கு கள்ளக்காதலன் துணையுடன் வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது, என்னை வெறுப்பேற்றும் விதமாக நான் பார்க்கும் வகையில் அவர் கள்ளக்காதலனுடன் ஜோடியாக ஷாப்பிங், சினிமா என ஜாலியாக சுற்றினார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நான் சந்தியா திருந்தி வாழ வில்லை என்றால் கொலை செய்து விடலாம் என்று திட்டமிட்டு கறிக் கடையில் இருக்கும் அதாவது மாடு வெட்டும்  கத்தியை வாங்கி  தயாராக வீட்டில் வைத்திருந்தேன், சந்தியாவை கடந்த 19ம் தேதி இரவு வீட்டிற்கு பேச வரச்சொன்னேன். அவரும் வந்தார் அப்போது,  குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினேன். அதற்கு சந்தியா, ‘நான் இனி கள்ளக்காதலனுடன்தான் வாழ்வேன். உனக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை.

நான் உன்னுடன் வாழ மாட்டேன்’என சொல்லி விட்டு, வீட்டை விட்டு வெளியேற முயன்றதால்.  நான் நினைத்தபடி சந்தியா சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். உடனே சந்தியாவை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றேன். சந்தியாவின் வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டு இன்னொரு கையால் கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்து தலையை வெட்டி எடுத்தேன். அடுத்ததாக உள்ளாடையை தவிர மற்ற ஆடைகளை கழற்றி விட்டு இரண்டு கைகள், இரண்டு கால்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்தேன். 

அடுத்ததாக பிறகு, இடுப்பு பகுதியை கத்தியால் வெட்டி எடுத்தேன். மொத்தம் 7 பாகங்களாக உடலை பிரித்து  எடுத்து. பிறகு, வீட்டிற்கு அரிசி சாக்கு எடுத்து 2 கால்கள், 1 கைகள் ஒரு பார்சலாகவும், இன்னொரு பார்சலில் தலை மற்றும் இடது கை, மார்பு பகுதி ஒரு பார்சலாகவும், தொடையில் இருந்து இடுப்பு வரை உள்ள பாகம் ஒரு பார்சலாகவும் பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து 4 பார்சலாக அடைத்து 20ம் தேதி அதிகாலையில் இரண்டு பார்சல்களை காசி தியேட்டர் பக்கத்திலுள்ள மேம்பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் வீசிவிட்டேன். மீதம் இருக்கும் இரண்டு பார்சல்களை MGR நகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு வீட்டிற்கு வந்தேன். அதுமட்டுமல்ல சந்தியாவின் செல்போனை உடைத்து தூக்கி போட்டுவிட்டேன் .

உடல் பாகங்களை வீசிவிட்டு வந்த நேராக வீட்டிற்கு வந்தேன், வீடு முழுவதும் ரத்த வாடை வந்ததால், டெட்டால், ஆசிட் ஊற்றி 6 முறை வீடு முழுவதும் சுத்தமாக கழுவினேன். கொலை செய்யப்பட்ட எந்த அடையாளமும் இல்லாமல் சினிமா ஸ்டைலில் அனைத்து வேலைகளையும் வெறும் 4 மணி நேரத்தில் பக்காவாக செய்து முடித்தேன். அன்று முதல் யாருக்கும் எதுவும் சந்தேகம் வராத மாதிரி எனது வேலையை செய்து வந்தேன். தொடர்ந்து தினமும் அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளை கவனமாக கண்காணித்து வந்தேன். ஆனால், சந்தியாவின் செல்போன் சிக்னலால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன் என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

click me!