தம்பி மனைவி மீது தீராத காமவெறி... அண்ணணை கொடூரமாக போட்டுத்தள்ளிய உடன்பிறப்புகள்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2019, 11:20 AM IST
Highlights

சென்னையில் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த அண்ணனை கழுத்து அறுத்து அவரது தம்பிகளே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த அண்ணனை கழுத்து அறுத்து அவரது தம்பிகளே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஐஸ்அவுசில் அயோத்தியா நகர், 29-வது பிளாக்கை சேர்ந்தவர் ஏழுமலை. இவர்களது மகன்கள் சக்திவேல் (48), ஞானவேல் (45), கந்தவேல் (37) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். சக்திவேல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குடிபோதைக்கு அடிமையானவர் என்பதால் தனது சகோதரன் ஞானவேல் மனைவியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், பூர்விகமாக உள்ள வீட்டை சக்திவேல் தனது இரண்டு சகோதரர்களிடம் இருந்து அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- ஆண் குழந்தைக்காக 16 வயது சிறுமியை கணவருக்கு விருந்தாக்கிய காமக்கொடூர மனைவி..!

இதனால் சக்திவேலுவுக்கும் அவரது தம்பிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பல முறை ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் ஞானவேல் தனது மனைவிக்கு அடிக்கடி தொந்தரவு செய்து வரும் சக்திவேலை ஒழித்து கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சக்திவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஞானவேல் மனைவியிடம் தன்னுடன் நெருங்கி இருக்கும் படி வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்துள்ளார். இதை பார்த்த சகோதரர்கள் இருவரும் தனது அண்ணன் சக்திவேலை கத்தியால் கழுத்தை அறுத்தியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு ஞானவேல் மற்றும் கந்தவேல் தப்பித்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்து வந்த ஞானவேல், கந்த வேலை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!