5 வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோடி சேர்ந்த தம்பதி; உறவினரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கள்ளகாதலன்

Published : Oct 10, 2023, 09:48 AM IST
5 வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோடி சேர்ந்த தம்பதி; உறவினரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கள்ளகாதலன்

சுருக்கம்

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் உறவினரை கொன்றுவிட்டு தலைமறைவான நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை  தாத்தூர் டேங்க் வீதியில் வசித்து வரும் உன்னிகிருஷ்ணன். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உன்னி கிருஷ்ணனும், அவரது மனைவியும் கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே உன்னி கிருஷ்ணனின் மனைவிக்கும், உன்னிகிருஷ்ணனின் உறவினரான சசிக்குமாருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர்கள் சிலர் உன்னிகிருஷ்ணனையும், அவரது மனைவியையும் நேற்று சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் உன்னிகிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்.. கைதான பெண் திடீர் உயிரிழப்பு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் உன்னி கிருஷ்ணனிடம் நட்பாக பேசி மது அருந்தலாம் என்று கூறி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவருக்கு அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து மயக்கமடைந்த உன்னி கிருஷ்ணனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு சசிகுமார் தலைமறைவான நிலையில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சசிகுமாரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!