மாப்பிள்ளைக்கு அந்த உறுப்பு ரொம்ப பெரியதாம்...!! முன்கூட்டியே அறிந்து தெளிவாக ஒதுங்கிய மணப்பெண்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2020, 4:28 PM IST
Highlights

இதில் மனம் உடைந்த ரமேஷ் ,  திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்து ஏமாற்றிய  ராஷ்மீ மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் .

மாப்பிள்ளைக்கு மூக்கு பெரிதாக இருக்கிறது கூறி எனவே  திருமணம் செய்து கொள்ள முடியாது என பெண்ணொருவர் திருமணத்தை  நிறுத்தியுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்தவர் ரமேஷ்.  இவருக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயராக  அமெரிக்காவில் பணிபுரிந்து  வரும் ராஷ்மி என்பவருக்கும் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது .  இதனையடுத்தே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே பெங்களூருக்கு வந்து ராஷ்மி உறவினர்கள் ரமேஷை சந்தித்துப் பேசினர்.   இந்நிலையில் கடந்த செப்டம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது .

இந்நிலையில் ரமேஷ் குடும்பத்தின் சார்பில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது ,  திருமண மண்டம், ஓட்டல் அறை என எல்லாவற்றிற்கும்  முன் பணங்கள்  கொடுக்கப்பட்டது  இதுவரையில் நான்கு லட்ச ரூபாய் வரை ரமேஷ் குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர் . இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேலையில்  திடீரென ராஷ்மி அமெரிக்கா புறப்பட்டுச்  செல்வதாக கூறியுள்ளார் .  இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் திருமணம் நடக்க உள்ள நிலையில் அமெரிக்கா செல்வதா.? என ராஷ்மி மற்றும் அவரது குடும்பத்தினருடன் கேட்டுள்ளனர்,   இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை திருமணத்தை நிறுத்தி விடுங்கள் எனக் கூறினார்  ராஷ்மி.  இதில்  அதிர்ச்சியில் உறைந்து மாப்பிள்ளை வீட்டார். காரணம் என்ன  என்று கேட்னர்,  " மாப்பிள்ளைக்கு மூக்கு பெரிதாக இருக்கிறது"  அதனால் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என கூறியுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கின் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறேன் என ராஷ்மியை சமாதானம் செய்தார் ரமேஷ்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ராஷ்மி,  மொத்தத்தில் உன்னை எனக்கு  பிடிக்கவில்லை என கூறி  திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் ,  இதில் மனம் உடைந்த ரமேஷ் ,  திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்து ஏமாற்றிய ராஷ்மீ மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் .  இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம்  ராஷ்மீ மற்றும் அவரது சகோதரிகள் லட்சுமி மற்றும் அவருடைய தந்தை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

click me!