பாத்திமா பாபுவின் பலான வீடியோ! பின்னணியில் ஸ்டெர்லைட்?

By sathish kFirst Published Nov 22, 2018, 9:57 AM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  போராடி வரும் பேராசிரியை பாத்திமா பாபுவின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தூத்துக்குடி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதுமே பாத்திமா பாபுவின் லீலைகள் என்கிற தலைப்பில் ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ நேற்று காலை முதல் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பேராசிரியை பாத்திமா பாபு இரவு உடையில் ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. சொகுசு ஓட்டல் ஒன்றில் அந்த ஆணுடன் பேராசிரியை உல்லாசமாக இருக்கும் காட்சிகளை சுட்டிக்காட்டி நியாயம் கேட்பது போல் ஒருவர் பேசுகிறார்.

மேலும் பேராசிரியைக்கு அந்த ஆண் முத்தமிடுவதுடன் இருவரும் ஒரே போர்வைக்குள் சென்று தங்கள் காம இச்சையை தீர்த்துக் கொள்வது தான்அந்த வீடியோவின் சாராம்சம். வீடியோவில் இருப்பது பேராசிரியை பாத்திமா தான் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வரவில்லை. காரணம் வீடியோ மிகவும் தெளிவாக உள்ளது.மேலும் வீடியோவில் இருக்கும் நபர் தெர்மல் ராஜா என்பவர் ஆவார்.

தெர்மல் ராஜாவும் – பேராசிரியை பாத்திமா பாபுவையும் அடிக்கடி வெளியே ஒன்றாக பார்த்திருக்க முடியும். எனவே வீடியோவில் உல்லாசமாக இருப்பது அவர்கள் தான் என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். இந்த வீடியோ குறித்து தற்போது வரை பாத்திமா பாபு எந்த மறுப்பும் வெளியிடவில்லை. அவரை பொறுத்தவரை அது தனது அந்தரங்க வாழ்க்கை என்பதோடு முடித்துக் கொள்கிறார்.

ஆனால் இந்த வீடியோ வெளியானது ஏன்? வெளியிட்டது யார்? என்பதற்கும் பாத்திமா பாபு பதில் அளிக்கிறார். 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வருகிறேன். பணம் கொடுத்து என்னை வளைக்க பார்த்தார்கள் முடியவில்லை. பிறகு நான் பணம் வாங்கிக் கொண்டு ஓடிவிட்டதாக புரளியை கிளப்பினார்கள் நான் பொருட்படுத்தவில்லை.

தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இதனையும் எதிர்கொள்வேன் என்று கூறுகிறார் பாத்திமா பாபு.

click me!