திருட சென்ற இடத்தில் பெண்ணுடன் வெறிகொண்ட உல்லாசம்...!! அதிகாலை நேரத்தில் அண்ணாநகர் திருடன் அட்ராசிட்டி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2020, 7:47 AM IST
Highlights

திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்த திருடன், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு கைது செய்த போலீசார்

திருட சென்ற இடத்தில் திருடன்,பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,   சிசிடிவி காட்சிகளின் உதவியோடு அவனை போலீசார் கைது செய்துள்ளனர்,   சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்கத்தில் காவலராக பணிப்புரிந்து வருபவர் கிருஷ்ணா பகதூர்/30,  இவர் கடந்த ஒரு வருட காலமாக இந்த கட்டிடத்தில் தனது மனைவியுடன் தங்கி காவலராக பணிப்புரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல பணியில் இருந்த பொழுது அதிகாலை வேளை அடுக்கத்தின் வாசல் அருகே உறங்கி கொண்டு இருந்தார். அவரது மனைவி அடுக்கத்தின் மேல் பகுதியில் லிப்ட் அறையில் உறங்கியுள்ளார். 

இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் பகதூர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய மனைவி கூச்சலிடவே மர்ம நபர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணா பகதூர் திருமங்லம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் உதவி ஆய்வாளர் யுவராஜ் உள்ளீட்ட தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அண்ணாநகர் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை வேளையில் பால் விநியோகிப்பது போல சென்று சுவர் எகிறி குதித்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திருடுவதற்க்காக சென்ற பொழுது இந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் உறங்கியதால் சபலத்தில் கத்தியை காட்டி மிரட்டி  பலாத்காரம் செய்ததையும் ஒப்புகொண்டார். இவர் மீது ஏற்கனவே அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொள்ளை அடித்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

click me!