சின்ன பசங்க ஜொள்ளு விடுவாங்க... என் இளமையை ரசித்து வர்ணித்த சுந்தரத்துக்கு என்னையே கொடுத்தேன்! தற்பெருமை பேசிய அபிராமி

By sathish kFirst Published Sep 3, 2018, 5:25 PM IST
Highlights

என்  தெருவில் வசிக்கும் இளைஞர்கள், சிறு பையன்கள் எல்லாம் என் மீது ஜொல்லுவிட்டனர் என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன். அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது இரண்டுக் குழந்தைகளையும்  பாலில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு தனது கள்ளக் காதலனுடன் வாழ கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை  அமைத்து நாகர் கோவிலில் கள்ளக் காதலனின் உதவியுடன் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் நாகர்கோவிலில் அபிராமி கைதானார். உடனடியாக, அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அபிராமி செய்த லீலைகள் விசாரணை நடத்திய போலிசார் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததாம்.

அவர் அளித்த வாக்குமூலத்தில்;  என் கணவர் விஜய் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக இருக்கிறார். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.  நாங்கள் வசித்த குன்றத்தூர் பகுதியில் நான் அனைவருடனும்  சிரித்துப் பழகியது ஏன் கணவர் விஜய்க்கு பிடிக்கவில்லை.  இதனால் எனக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி  பிரச்சனை வந்தது. இதனால், அடிக்கடி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் பெரியபனிச்சேரியில் உள்ள  எனது அம்மா வீட்டுக்குச்  சென்றுவிடுவேன். 

எனக்கு பிரியாணி என்றால்  உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.  சில மாதங்களுக்கு முன்பு  குன்றத்தூரில் உள்ள ஒரு  ஓட்டலுக்கு  சென்று பிரியாணி சாப்பிட்டோம். அப்போது, அந்த கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன்  பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில், அது  காதலாக மாறியது. சுந்தரம் தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அது  காமத்தில் முடிந்தது.  

மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை. மேலும் நான் இரவில் கணவர் விஜயை நெருங்கினால், அவர் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆனால் என்  தெருவில் வசிக்கும் இளைஞர்கள், சிறு பையன்கள் எல்லாம் என் மீது ஜொல்லுவிட்டனர். என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன். அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைப்பதாக  உணர்ந்தேன். 

கணவர் விஜய் மற்றும் குழந்தைகள் அடிக்கடி என்னை சுற்றி சுற்றியே வந்தனர். இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார். அதற்கான ஐடியா மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார். 

அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர்  மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா  படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள் இவ்வாறு கூறியுள்ளார்.

click me!