பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுடன் 'லிவிங் டு கெதர்' . இஸ்டத்துக்கு உல்லாசம்.. கழுத்தை நெறித்து கொலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2022, 6:35 PM IST
Highlights

பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணுடன்  ' லிவிங் டு கெதர் '  திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், அப்பெண்ணை இளைஞர் அடித்துக் கொலை செய்துள்ளார்.
 

பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணுடன்  ' லிவிங் டு கெதர் '  திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், அப்பெண்ணை இளைஞர் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கோவிந்த்புரி பகுதியில் ஓம் பிரகாஷ் என்ற இளைஞர் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த  ஜிலேகா என்ற இளம்பெண் காதல் ஏற்பட்டு இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. 

அப்போது  இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துவந்தது, அப்போது ஓபி பிரகாசுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் தனது சகோதரர் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் சஞ்சய்  ஆகியோரின் உதவியுடன் அப்பெண்ணின் சடலத்தை காரில் எடுத்துச் சென்று  யமுனா விரைவுச் சாலை அருகே  வீசிவிட்டு தலைமறைவாயினார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் உத்தரபிரதேச போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்: உன் புருஷனை விட்டுட்டு வா... கல்லூரி தோழிக்கு ஆசை காட்டிய போலீஸ் அதிகாரி.. நடுத்தெருவில் நின்ற காதலி.

அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதே நிலையில் ஜூலை 7ஆம் தேதி அந்தப் பெண் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் பிரஜோஸ் என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த  ஜிலோகாவை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர், யமுனா விரைவுச்சாலை அருகே கண்டுபிடிக்கப்பட்ட சடலத்துடன் ஜிலேகாவின் அங்க அடையாளங்கள் ஒத்துப் போனது,

இந்நிலையில் ஜூன் 26ஆம் தேதி அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, கருப்புநிற ஸ்விப்ட் டிசையர் காரில் பெண்ணின் சடலத்தை மூன்று பேர் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளில் ஓம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார் இருப்பது தெரியவந்தது, மூன்றாவது நபர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை, இந்நிலையில் போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் ஓம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமாரை கைது செய்தனர். ஜூலை 5ஆம் தேதி சீமாபுரியில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: அடத்தூ.. பக்கத்து வீட்டு பெண்ணை கூட்டி வந்து கணவனுக்கு விருந்து வைத்த மனைவி.. உடலுறவை வீடியோ எடுத்து கொடூரம்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் ஜிலேகாவுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்ததையும் பணப்பிரச்சினையில் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்து வந்த அவர்களின் கூட்டாளி சஞ்சய்யை போலீசார் தெற்கு டெல்லி பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.
 

click me!