காலைல நிர்வாண மசாஜ்... மதியானம் உல்லாசமாக இருக்கணும்! மாணவியின் பகீர் வாக்குமூலம்!!

By sathish kFirst Published Sep 24, 2019, 5:24 PM IST
Highlights

காலைல நிர்வாண மசாஜ் செய்துவிடணும், மதியானம் தனி அறைக்கு செல்ல வேண்டும். அவர் என்னை அப்போது வன்கொடுமை செய்வார். மாதவிடாய் என்றாலும் விடமாட்டாரு என பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது சட்ட கல்லூரி மாணவி தந்திருக்கும் வாக்குமூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

காலைல நிர்வாண மசாஜ் செய்துவிடணும், மதியானம் தனி அறைக்கு செல்ல வேண்டும். அவர் என்னை அப்போது வன்கொடுமை செய்வார். மாதவிடாய் என்றாலும் விடமாட்டாரு என பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது சட்ட கல்லூரி மாணவி தந்திருக்கும் வாக்குமூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பிஜேபி தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஒரு வருடமாக என்னை உடல் ரீதியாக உல்லாசம் அனுபவித்து வந்ததாக சட்டக்கல்லூரி மாணவி பகிரங்கமாக செய்தியாளர்களிடம் கூறினார்.

இது சம்பந்தமான புகாரை அவர் அளித்ததை தொடர்ந்து, கடந்த 20ம் தேதி சின்மயானந்தா கைது செய்யப்பட்டு இப்போது ஜெயிலில் உள்ளார். இந்நிலையில் சின்மயானந்தா தனக்கு எப்படியெல்லாம் பாலியல் தொல்லை தந்தார் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.  தி பிரிண்ட் இணைய இதழில் வெளியான வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவி அளித்துள்ள வாக்குமூலத்தில்; பலமுறை படிப்பிற்காக நான் அவரை சந்தித்திருப்பதால், என்னை அவரை பார்க்க அழைத்தபோது நானும் மரியாதையாக பார்க்க சென்றேன் அப்போது   முதல் முறையாக என்னை அவர் ரூமுக்கு அழைத்து சென்றார், தன் பக்கத்தில் உட்காருமாறு சொன்னார். 

பிறகு அவருடைய செல்போனை எடுத்து என்னிடம் கொடுத்து அதில் உள்ள வீடியோவை சொன்னார். அதை பார்த்ததும், நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் நான் நிர்வாணமாக குளித்த வீடியோ இருந்தது. உடனே நான் அழ ஆரம்பித்ததும், உடனே அவர் சிரிக்க ஆரம்பித்தார்.

இந்த வீடியோ வெளியே போககூடாது என்றால், எனக்கு என்ன தேவையோ அதை நீ நிறைவேற்றணும், இல்லைன்னா இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகும், உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன் என்றார். பிறகு என்னை நிர்வாணமாக ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். நான் மாட்டேன் என்றதும், என்னை அடித்து கொடுமை படுத்தினார். தினமும் காலை  6 மணி ஆயிடுச்சுன்னா போதும், நான் நிர்வாண மசாஜ் செஞ்சிவிடனும். மதியானம் 2.30 மணிக்கு ஆச்சுன்னா சின்மயானந்தாவின் தனி அறைக்கு செல்ல வேண்டும். அவர் என்னை உடல் ரீதியாக உல்லாசம் அனுபவிப்பார். மாதவிடாய் என சொன்னாலும்  விடமாட்டார். இந்த நரக வேதனையை பலரிடம் சொல்லி அழுதேன். ஆனால் யாருமே என்னை நம்பல, அதற்கான ஆதாரம் கேட்டாங்க.

அப்போ தான், நான் ஆதாரங்களை திரட்ட முடிவு செஞ்சேன். பேனா, மூக்குக்கண்ணாடியில் இருக்கும் ரகசிய கேமரா இருப்பது தெரிந்து, அதன்படியே ஒரு மூக்குக்கண்ணாடியை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். அதை வைத்துதான் அவர் எனக்கு செய்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தேன். அப்போதான் எனக்கே தைரியமே வந்தது என்று தெரிவித்துள்ளார்.  

click me!