8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன்.. காரணம் கேட்டால் அதிர்ந்து போயிடுவீங்க..!

Published : Apr 05, 2022, 12:07 PM IST
8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன்.. காரணம் கேட்டால் அதிர்ந்து போயிடுவீங்க..!

சுருக்கம்

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த தனது 8 வயது மகனை திடீரென காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் சிறுவனின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

டெல்லியில் முன்விரோதம் காரணமாக 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை கடத்தி கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுப்பகுதியில் சிறுவனின் சடலம்

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த தனது 8 வயது மகனை திடீரென காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் சிறுவனின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

திடுக்கிடும் தகவல் 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டது காணாமல் 8 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பின்னர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்த 8 வயது சிறுவனுக்கும் அவனது நண்பனான 13 வயது சிறுவனுக்கும், கடந்த வாரத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாயின் பணம், சில பொருட்கள் காணாமல் போனதற்கு 13 வயது சிறுவனே காரணம் என்று 8 வயது சிறுவன் குற்றம்சாட்டியதாக தெரிகிறது.

சிறுவன் கைது

இதனால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பழிக்குப்பழி தீர்க்க நினைத்த 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை கடத்தி காட்டிற்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பதுங்கியிருந்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.  13 வயது சிறுவன் 8 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!