#BREAKING தொழிலதிபர் கழுத்தறுத்து துடிதுடிக்க கொலை.. மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளை.!

Published : Apr 25, 2022, 08:40 AM IST
#BREAKING தொழிலதிபர் கழுத்தறுத்து துடிதுடிக்க கொலை.. மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளை.!

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு ராஜா முகமது, ஷேக் அப்துல் காதர், பர்கானா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். மகள்  பர்கானாவிற்கு திருமணமாகி தனியாக உள்ளார். மகன்கள் இருவரும்  பரம்குடியில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது  மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொழிலதிபர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு ராஜா முகமது, ஷேக் அப்துல் காதர், பர்கானா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். மகள்  பர்கானாவிற்கு திருமணமாகி தனியாக உள்ளார். மகன்கள் இருவரும்  பரம்குடியில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவர் மட்டுமே ஆவுடையார்பட்டினத்தில் வசித்து வந்தனர்.

 

கழுத்தறுத்து கொலை

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில்  வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு முன்பக்க வரண்டாவில் உட்கார்ந்து முகமது நிஜாம் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் சுற்றுச்சுவரை எகிறி குதித்த 3 பேர் நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிஜாம் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தார்.  

நகை கொள்ளை

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு பீரோ சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால், உயிருக்கு பயந்த ஆயிஷா பேபி பீரோ சாவியை கொடுத்துள்ளார். பீரோவை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

போலீஸ் விசாரணை

கை, கால்கள் கட்டப்பட்ட ஆயிஷா பேபி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது முகமது நிஜாம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கட்டிப்போட்டு இருந்த  ஆயிஷா பேபி காப்பாற்றினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகமது நிஜாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழில் போட்டி காரணமாக தொழில் அதிபர் நிஜாம் கொல்லப்பட்டாரா? அல்லது கொள்ளை சம்பவத்தின்போது கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி