அந்த நடிகருடன் காதலா?... ரகுல் ப்ரீத் சிங்கின் பதில் இதுதான்!...

Published : Nov 07, 2019, 10:28 AM IST
அந்த நடிகருடன் காதலா?... ரகுல் ப்ரீத் சிங்கின் பதில் இதுதான்!...

சுருக்கம்

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே. படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.-14 படம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2 ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். 

சமீபத்தில், ரகுல் ப்ரீத் சிங்கின் சொந்த வாழ்க்கை பற்றி செய்து ஒன்று வெளியானது. அதில், பிரபல தெலுங்கு நடிகரும், பாகுபலியின் வில்லனுமான ராணாவை, ரகுல் காதலிப்பதாக பேசப்பட்டது. 


தற்போது, அவர் அளித்துள்ள பேட்டியில், அதை மறுத்துள்ளார். "எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. இரண்டு நிமிடத்தில் சென்றுவிடலாம். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். அப்போது அவர் காதலில் இருந்தார். 

நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை" என கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.ராணாவுடன் நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வருவது இது புதிதல்ல. 

ஏற்கெனவே, திரிஷா, பிபாசா பாசு உள்ளிட்ட நடிகைகளுடன் ராணாவை தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லாம் கிசுகிசுக்காளகவே பார்க்கப்பட்டது. இதேபோல், ரகுல் - ராணா செய்தியும் ஒரு கிசுகிசுதான் என தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?