
போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பட்டாசுக்கு திரி கிள்ளி விட்டு காலா ஷூட்டிங்குக்கு சென்று விட்டார் ரஜினி. ஆனால் சினிமாவுக்கே ஒரு பெரிய ஆபத்தாக ஜிஎஸ்டி வரி வந்திருக்கிறது. அதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நியாயக்குரல் எழுப்புகிறது கோலிவுட்.
ரஜினி ரசிகர்களை சந்தித்ததும் அரசியலுக்கு வருவது பற்றி ஹிண்ட் கொடுத்ததும் தான் இன்றுவரை தலைப்புசெய்தியாகி வருகின்றன.
இந்த சூழலில் தான் மத்திய அரசு திரைப்படங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது.இதனால் டிக்கெட் விலை கணிசமாக உயர்ந்து மக்கள் சினிமாவையே மறக்கும் சூழல் உருவாகும். ஏற்கனவே மக்கள் தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பதை தவிர்த்து இண்டர்னெட், டிவிடி மூலம் பார்ப்பதால் திரைத்துறையினருக்கு கடுமையான நஷ்டம். இந்த வரி விதிப்பைக் கண்டு கதிகலங்கிப்போயிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
ஜிஎஸ்டியை எதிர்த்து கமல்ஹாசன் குரல் கொடுத்து விட்டார். விஷாலும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். ஆனால் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினி இதுவரை வாயே திறக்கவில்லை. ரஜினி குடும்பத்திலேயே தனுஷ் தயாரிப்பாளராக இருக்கிறார். அவரும் வாய் திறக்கவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.