#BREAKING உச்ச கட்ட பரபரப்பு... ஒன்றரை மணி நேரம் நடந்த விஜே சித்ரா உடற்கூராய்வு நிறைவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 10, 2020, 12:55 PM IST
#BREAKING  உச்ச கட்ட பரபரப்பு... ஒன்றரை மணி நேரம் நடந்த விஜே சித்ரா உடற்கூராய்வு நிறைவு...!

சுருக்கம்

பிரதேச பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளதால் வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். தற்போது 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவை அடைந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

பிரதேச பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சக நடிகர், நடிகைகளிடமும், உறவினர், நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகுமார் மகளா இது? 50 வயதிலும் அழகு தேவதையாக மிளிரும் அனிதா - வைரலாகும் போட்டோஸ்
சூர்யாவை போல் நானும் இலவச கல்வி கொடுப்பேன்... அக்கட தேசத்து சூப்பர்ஸ்டாரின் அடிபொலி அறிவிப்பு