
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து கொண்டு இருக்கும் படம் சண்டைகோழி 2. தனது சொந்த தயாரிப்பில் இந்த படத்துக்காக பல கோடி செலவில் செட் போட்டு படபிடிப்பு நடத்தி ஒண்டு இருகிறார்கள். ஆனால், தயாரிப்பு சங்க தலைவர் என்பதால் தீபாவளிக்கு விஜயின் மெர்சல் படம் ரிலீஸ்யில் எந்த பிரச்னையும் வர கூடாது என்று தன படபிடிப்பை நிறுத்திவிட்டார்.
ஏற்கனவே பொங்கலுக்கு பைரவா படத்தை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக போகும் பிரம்மாண்ட படம் தான் மெர்சல். விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் படத்தின் டீஸர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த காரணத்தால் கடந்த வாரம் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.
மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று நடிகர்சங்க தலைவர் விஷால் தன்னுடைய சண்டக்கோழி 2 பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்திருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.