
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், டெங்கு ஒரு சவாலாக தான் உள்ளது
இந்நிலையில் “சண்டைகோழி 2” படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது நடிகர் விஷால் மற்றும் மயில்சாமி ஆகியோர் ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
நிலவேம்பு கசாயத்தை வழங்கிய விஷாலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். ஆனால் நிலவேம்பு கசாயம் தமிழக அரசு மருத்துவமனையில் எப்பொழுதுமே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.