
இயக்குனர் ஹரி இயக்கத்தில், ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி, மற்றும் பூஜை ஆகிய படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில், மூன்றாவது முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் தன்னுடைய 34-ஆவது படத்திற்காக இணைந்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி வட்டாரத்தில் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் அடுத்தப்பட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கடைசியாக தன்னுடைய மைத்துனர் அருண் விஜய்யை வைத்து இயக்குனர் ஹரி இயக்கிய 'யானை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹரியுடன் 'ரத்னம்' படத்தில் கைகோர்த்துள்ளார்.
மேலும் யோகி பாபு, கெளதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஷால் கிராமத்து இளைஞர் வேடத்தில் நடிக்கிறார். இன்று இந்த படத்தின் டைட்டில் 'ரத்னம்' என்று வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் ஃபர்ஸ்ட் லுக்கில், விஷால்.. ரத்த கலரியில் ஒரு கையில் அருவா மற்றும் மற்றொரு கையில் மனிதனின் தலை என கொடூரமாக காட்சியளிக்கிறார். அவர் கட்டி இருக்கும் பட்டி பெல்ட்டில் பல கத்தி சொருகி வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.