மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய் சேதுபதி; அதுவும் மணிரத்னம் படத்தில்…

 
Published : Oct 12, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய் சேதுபதி; அதுவும் மணிரத்னம் படத்தில்…

சுருக்கம்

Vijay Sethupathi who plays the police officer again Mani Ratnam film ...

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், உட்பட பலர் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தில் நடிகைகள் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இயைமைக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அதில் நட்சத்திரக் கூட்டங்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொருவருடைய படங்கள் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முன்னனி கதாநாயகர்கள் இரண்டு கதநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து படத்தில் வேலை செய்யப் போகிறார்களாம்.

இதில், விஜய் சேதுபதி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு இணையாக ஜோதிகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பகத் பாசில் உள்ளிட்ட மற்ற அனைவரும் கேங்க்ஸ்டர்களாக நடிக்கிறார்களாம்.

இப்படத்துக்காக விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைக்க இருக்கிறார் என்பதும் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்பதும் கூடுதல் தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!