எந்த நடிகரும் செய்யாத புதிய சாதனையை திரையரங்கில் செய்த விஜய் சேதுபதி......!!!

 
Published : Oct 07, 2016, 05:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
எந்த நடிகரும் செய்யாத  புதிய சாதனையை திரையரங்கில்  செய்த விஜய் சேதுபதி......!!!

சுருக்கம்

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. 

இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று விஜய்சேதுபதி படங்களுக்கு கிடைத்துள்ளது.

அது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியானது. இந்நிலையில், வருகிற 7-ந் தேதி அவர் நடித்த ‘றெக்க’ படமும் வெளியாகவிருக்கிறது.

இந்த இரண்டு மாதங்களுக்குள் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சத்யம் திரையரங்கில் ஏற்கெனவே விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. 

மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் ‘றெக்க’ படமும் வெளியாகவுள்ளது.இதனால்  வெள்ளிக்கிழமை பார்த்தால் சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்களும் திரையிடப்பட்டு இருக்கும். 

சத்யம் திரையரங்க வரலாற்றிலேயே ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த பெருமையை விஜய் சேதுபதி பெற்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!