கதைத்திருட்டு வழக்கு இன்று விசாரணை... சர்கார் படத்துக்கு தடை வர்றதுக்கெல்லாம் சான்ஸ் இருக்கா என்ன?

Published : Oct 25, 2018, 09:45 AM IST
கதைத்திருட்டு வழக்கு இன்று விசாரணை... சர்கார் படத்துக்கு தடை வர்றதுக்கெல்லாம் சான்ஸ் இருக்கா என்ன?

சுருக்கம்

மிருக பலம் கொண்ட ‘சர்கார்’ கோஷ்டிகளிடம்  திரையுலக அமைப்புகள் நீதிபெற்றுத்தர முடியாததால் கதையின் உரிமையாளர் கோர்ட் படியேறி இருக்கிறார்.

மிருக பலம் கொண்ட ‘சர்கார்’ கோஷ்டிகளிடம்  திரையுலக அமைப்புகள் நீதிபெற்றுத்தர முடியாததால் கதையின் உரிமையாளர் கோர்ட் படியேறி இருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ’சர்கார்’ படத்தின் கதைப் பஞ்சாயத்து கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடந்துவருகிறது. இதில் எந்தவித பலனும் ஏற்படாததால்  கதை என்னுடையது எனக் கூறி வருண் என்ற ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதில், “செங்கோல் என்ற தலைப்பில் தாம் உருவாக்கிய கதை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனைத் திருடி 'சர்கார்’ என்ற தலைப்பில் முருகதாஸ் படமாக்கியுள்ளார். செங்கோல், சர்கார் இரண்டும் ஒரே கதை என இந்த விவகாரத்தை விசாரித்த எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தெரிவித்திருக்கிறார். 

ஆகையால் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார். இதனை ஏற்ற நீதிபதி எம்.சுந்தர் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!