பண மோசடி வழக்கில் சிக்கிய விஜய் பட நடிகை! போலீசில் பரபரப்பு புகார்!

Published : Mar 31, 2019, 04:06 PM IST
பண மோசடி வழக்கில் சிக்கிய விஜய் பட நடிகை! போலீசில் பரபரப்பு புகார்!

சுருக்கம்

தளபதி விஜயுடன் நடித்த நடிகை அமீஷா படேல் மீது, பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தளபதி விஜயுடன் நடித்த நடிகை அமீஷா படேல் மீது, பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் அமீஷா படேல். இந்த படத்திற்கு பின் பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருந்ததால் தமிழ் படங்களில் இவரால் நடிக்க முடியவில்லை. 

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடனும் நடிக்கவில்லை. இந்நிலையில் 'குணால் க்ரூமர்' என்பவருடன் இணைந்து அமீஷா படேல் 'டெய்சி மேஜிக்' என்கிற படத்தை தயாரித்தார்.

அதற்காக அஜய் குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடனாக பெற்றார். ஆனால் இந்த படம் வெளிவராத நிலையில் அமீஷா படேல் கடனாக பெற்ற பணத்தை, அஜய் திரும்பக் கேட்டுள்ளார்.

அதற்கு அமீஷா படேல் செக் ஒன்று கொடுத்துள்ளார். வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் இந்த செக் பவுன்ஸ் ஆகி உள்ளது. அதனால் அமீஷா படேலிடம் பணம் கேட்டதற்கு அவருக்கு தெரிந்த நபர்கள் அந்த நபரை மிரட்டியுள்ளனர் அதனால் பைனான்சியர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த புகாரில் அடிப்படையில், அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அமீஷா படேலிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!