பிரபல நடிகர் இயக்கத்தில்... மீண்டும் சரித்திர கதையில் நடிக்க ஓகே சொன்ன தளபதி!

By manimegalai aFirst Published May 28, 2020, 11:13 AM IST
Highlights

இளைய தளபதி விஜய் குழந்தைகளை கவரும் விதத்தில், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆண்டு நடித்த சரித்திர திரைப்படம் 'புலி'. இந்த படத்தை தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருந்தார்.
 

இளைய தளபதி விஜய் குழந்தைகளை கவரும் விதத்தில், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆண்டு நடித்த சரித்திர திரைப்படம் 'புலி'. இந்த படத்தை தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருந்தார்.

மேலும் தமிழ் படங்களில் பல வருடமாக நடிக்காமல் இருந்த, நடிகை ஸ்ரீ தேவி இந்த படத்தில் மிகவும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா,சுதீப், தம்பி ராமையா, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம் குழந்தைகளை கவரும் விதத்தில் இருந்தாலும், பெரிதாக வெற்றிபெறவில்லை.

இந்த சரித்திர படத்தை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில், விஜய் நடிக்க முடியாமல் போனது. 

இந்நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான, சசி குமார் இயக்கத்தில் விஜய் மீண்டும் சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் திரையுலகில் தீயாய் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் நடிகர் சசிகுமார் கொடுத்த ஒரு பேட்டி தான். 

சரித்திர படத்தின் கதை ஒன்றை தயார் செய்து, அதனை தளபதி விஜயிடம் கூறியுள்ளதாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க ஆர்வமாக இருந்தாலும், பட்ஜெட் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் இந்த படம் இன்னும் துவங்க வில்லை என தெரிவித்தார். எனவே கூடிய விரைவில் தளபதி விஜய் சரித்திர படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.

click me!