
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று, ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறியுள்ளனர். வனிதா, ஷெரின், லாஸ்லியா அனைவரும் இரட்டை சடை போட்டுகொண்டு, ஸ்கூல் கவுன் அணிந்து, குழந்தைகள் செய்யும் சேட்டைகளை செய்து வருவது ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் தெரிந்தது.
அதே போல, ஆண் போட்டியாளர்களும் அனைவரும் ஸ்கூல் பையன் போல் தோற்றம் அளிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், டீச்சராக இருக்கும் கஸ்தூரி, வாத்து என வனிதாவை கூறுவது போல், வாத்து பாடலை வனிதா வந்து பாடுவார்கள் என கூறுகிறார். வனிதாவை டீச்சர் வாத்து என்று அழைத்தார் என, சாண்டியும் கூறுகிறார்.
பின் முன்னே எழுந்து வரும் வனிதா, ஹெட் மாஸ்டர் சேரனிடம்... ஸ்டுடென்ட் தவறு செய்தால் மட்டும் தண்டனை தராங்க டீச்சர். டீச்சர் தப்பு செஞ்ச ஏன் சாரி கேட்க மாட்றாங்க என கேள்வி எழுப்ப இதற்கும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திணறி நிற்கிறார் சேரன்.
வாத்து என எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தையை விட்டதால், இன்று வனிதாவிடம் டீச்சர் கஸ்தூரி மன்னிப்பு கேட்பாரா என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.