
இசைஞானி இளையராஜாவின் சவாலை ஏற்று, 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்திற்காக உதடுகள் ஒட்டாத வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதினார். "தந்தேன் தந்தேன் இசை" எனத் தொடங்கும் அந்தப் பாடல் உருவான கதை தெரியுமா? தமிழ் சினிமாவில் பல சவாலான முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் “உதடு ஒட்டாத வார்த்தைகள்” கொண்டு ஒரு முழு பாடலை உருவாக்குவது என்பது உண்மையிலேயே அசாதாரணம். அந்த சாதனையை நிகழ்த்தியவர் கவிஞர் வாலி. அவரின் படைப்பாற்றலும், இசைஞானி இளையராஜா இசையும் சேர்ந்தபோது, தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான இசை வரலாறு உருவானது.