விரதம் எடுத்து, காலில் செருப்பு போடாமல்  அம்மன் சிலையை தூக்கி கொண்டு கிராமத்தையே சுத்தி வந்த உதயநிதி...

 
Published : Jun 10, 2017, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
விரதம் எடுத்து, காலில் செருப்பு போடாமல்  அம்மன் சிலையை தூக்கி கொண்டு கிராமத்தையே சுத்தி வந்த உதயநிதி...

சுருக்கம்

udhayanithi acting village person role

உதயநிதி நடித்து வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் தான் நடித்து வரும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தளபதி பிரபு என்பவர் இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். 

முதல் முறையாக உதயநிதி கிராமத்து இளைஞனாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இவர் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை தலையில் வைத்து சுமந்து வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம்.

இதற்காக உதயநிதி அம்மனுக்கு முறையாக விரதம் இருந்து, காலில் செருப்பு போடாமல் அந்த கிராமத்தையே சுற்றி வந்தாராம். மேலும் இவரின் நடிப்பு பக்தியை பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?