தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை... மளிகைப்பொருட்களுடன் மரியாதையையும் சேர்த்து கொடுத்த விஜய் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 09, 2020, 07:42 PM ISTUpdated : Apr 09, 2020, 07:44 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை... மளிகைப்பொருட்களுடன் மரியாதையையும் சேர்த்து கொடுத்த விஜய் ரசிகர்கள்...!

சுருக்கம்

நாட்டு மக்களின் உயிரை காக்க தங்களை பணயம் வைத்து பாடும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக திருவண்ணாமலையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் பாதபூஜை செய்துள்ளனர். 

கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சின்னாபின்னமாகி வருகிறது. நம்மையே நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு வேலை அரிசி கஞ்சி கொடுக்கவாவது உதவுக்கரம் நீட்டுங்கள் என்று பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தயாரிப்பாளர் தாணு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நிதி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினார்.

கொரோனா குறித்து நீண்ட நாட்களாக வாய் திறக்காமல் இருந்த தல அஜித் கூட மத்திய அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், மாநில அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க 25 லட்சம் என ஒரே நாளில் ரூ.1.25 கோடி நிதி அளித்து சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆகிவிட்டார். ஆனால் தளபதி விஜய்யோ இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்க மனசில்லாமல் இருப்பது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 

இந்த சமயத்தில் எங்க தளபதி கொடுக்கலைன்னா என்ன நாங்க இருக்கோம் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் தீயாய் சேவை செய்து வருகின்றனர்.  மக்களுக்கு காய்கறி, அரிசி மூட்டை வழங்குவது, நமக்காக சேவையாற்றும் காவலர்களுக்கு உணவளிப்பது, தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் உடன் சேர்ந்து ஒரு மாத மளிகை பொருட்களையும் வழங்குவது என தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு அடுத்ததாக தங்களது உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கியிருப்பது தூய்மை பணியாளர்கள் தான். முதலில் அங்கீகாரம் மறுக்கப்பட்டாலும், தூய்மை பணியாளர்களின் உன்னத சேவையை புரிந்துகொண்ட மக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நாட்டு மக்களின் உயிரை காக்க தங்களை பணயம் வைத்து பாடும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக திருவண்ணாமலையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் பாதபூஜை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கி மனதோடு சேர்த்து, வயிறையும் குளிர வைத்துள்ளனர். 

பணத்தை விட உயிர் காக்க உதவும் மனிதர்களே முக்கியம் என்பதை பறைசாற்றும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு பண மாலை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு