பப்லிசிட்டிக்காக பொய் புகார் கொடுத்த தயாரிப்பாளர்! உண்மை என்ன? நடிகை பரபரப்பு பேட்டி!

Published : Aug 01, 2019, 05:03 PM IST
பப்லிசிட்டிக்காக பொய் புகார் கொடுத்த தயாரிப்பாளர்! உண்மை என்ன? நடிகை பரபரப்பு பேட்டி!

சுருக்கம்

‘தொரட்டி’படத்தயாரிப்பாளரும் ஹீரோவுமான மித்ரு, தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்த, பொள்ளாச்சியை சேர்ந்த, சத்தியகலா காணவில்லை என புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசிய படத்தின் நாயகி, தயாரிப்பாளர்,  பப்ளிசிட்டிக்காக இப்படி செய்துள்ளார் என்கிற உண்மையை போட்டுடைத்துள்ளார்.

‘தொரட்டி’படத்தயாரிப்பாளரும் ஹீரோவுமான மித்ரு, தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்த, பொள்ளாச்சியை சேர்ந்த, சத்தியகலா காணவில்லை என புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசிய படத்தின் நாயகி, தயாரிப்பாளர்,  பப்ளிசிட்டிக்காக இப்படி செய்துள்ளார் என்கிற உண்மையை போட்டுடைத்துள்ளார்.

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் ‌ஷமன் மித்ரு. இவர் ’தொரட்டி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த சத்திய கலா (26) என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 2-ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் பட தயாரிப்பாளர் ‌ஷமன் மித்ரு பட ரிலீஸ் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். 

அதில் நடிகை சத்தியகலா கலந்து கொள்ளவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி போலீசாருக்கு கடந்த 25-ந் தேதி ‌ஷமன் மித்ரு தபால் மூலம் புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து கடந்த 29-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் புகார் மனு சி.எஸ்.ஆர். வழங்கி சத்திய கலா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சத்திய கலாவின் பெற்றோர் எங்கள் மகள் இங்கு தான் உள்ளார். அவர் எங்கும் மாயமாகவில்லை என தெரிவித்தனர். 

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமன் மித்ரு சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள சத்திய கலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்க கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் சத்திய கலா தற்போது எங்கே உள்ளார்? என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை சத்திய கலா வீட்டில் தான் இருந்தார். அவர் போலீசாரிடம், ”நான் மாயமாகவில்லை. எனது வீட்டில் தான் உள்ளேன். கருத்து வேறுபாடு காரணமாக தான் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு செல்லவில்லை” என பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து, இன்று சென்னையில், செய்தியாளர்களை ஸ்சந்தித்து, காணாமல் போன விஷயம் குறித்து விளக்கம் கொடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக இயக்குனர் புகார் கொடுத்துள்ளார். உண்மையில் நான் எங்கும் செல்லவில்லை வீட்டில்தான் இருந்தேன்.  தயாரிப்பாளர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை,  தயாரிப்பாளர் தன்னிடம் நடந்து கொண்டது மதிப்பு கொண்டதாக இல்லை என பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!