முன்பு அஜித் அடிக்கடி சொல்லும் வசனம் இப்போது எனக்கு நடந்து இருக்கிறது என திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
முன்பு அஜித் அடிக்கடி சொல்லும் வசனம் இப்போது எனக்கு நடந்து இருக்கிறது என திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
திரெளபதி படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், ‘’அதிகமான டென்ஷன் என்னவென்றால் கிரவுட் ஃபண்டிங் இந்த இல் படத்தை தொடரும் என தம்பட்டம் அடித்து விட்டோம். நட்சத்திரங்களின் படங்களுக்கு கிடைக்கக்கூடிய எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருந்தது.
ஆனால், இந்த படத்திற்கு நாங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய செலவு உண்மையில் ஒரு லட்சத்தை கூட தாண்டது. இதுவரை நாங்கள் பத்திரிகையாளரை சந்திக்கவே இல்லை. எங்கேயும் செலவுசெய்தது இல்லை. சமூக வலைதளங்களில் இருக்கக்கூடிய எங்கள் பக்கங்களில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டோம். நான் அஜீத் ரசிகராக இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒரு நல்ல படம் அது தன்னைத்தானே மக்களிடம் கொண்டு பேசி எடுத்துக் கொள்ளும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அதை நான் நிறைய சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளேன். அது எனக்கு நடக்கிறது என்கிற போது அந்த மனிதன் எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி இருக்கிறார் என்பது புரிகிறது’’எனத் தெரிவித்துள்ளது.