KamalHaasan : கொரோனா விதிமுறைகளை மீறினாரா கமல் ? ; கிடுக்கிப்பிடி போட்ட சுகாதாரத்துறை

By Kanmani PFirst Published Dec 6, 2021, 12:50 PM IST
Highlights

KamalHaasan : மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக Bigg Boss படப்பிடிப்புக்குச் சென்றது தொடர்பாக விளக்கமளிக்க கமலுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல்.

கமலுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக  அவர் கமிட்டாகியுள்ள விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அந்த வாரத்தில் தீர்ப்பளித்திருந்த ரம்யா சரியாக போட்டியாளர்களை கவனிக்க வில்லை என்கிற புகார் எழுந்தது. அதோடு கமல் தொகுத்து வழங்குவது போலில்லை என ரசிகர்கள் பீல் செய்தனர். இதனால் இந்த வாரம் எப்படி போகப்போகுதோ என்னும் தவிப்பு ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்டுள்ளது.

பின்னர் கடந்த சனிக்கிழமை காலை கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கமல் உடனடியாக பிக் பாஸ் செட் போட்டுள்ள இவிபிக்கு சென்றுவிட்டார். அங்கு பேனர் வைத்து  பிக்பாஸ் நிர்வாகம்  வரவேற்பு அளித்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது.

பொதுவாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் சிறுது காலம் தங்களை தனிப்படுத்திக்கொள்வது அவசியம் என் அரசு சொல்கிறது. இந்நிலையில் மருத்துவமணியிலிருந்து நேராக கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றது பல கேள்விகளை எழுப்பி வந்தது.

இந்த சூழலில் மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக Bigg Boss படப்பிடிப்புக்குச் சென்றது தொடர்பாக விளக்கமளிக்க கமலுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

click me!