
சுரேஷ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் நீதிக்காக போராடும் புரட்சிகரமான இளைஞராக சூரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்.
அவரது எழுச்சியான நடிப்பும், "நான் யாரோட பாதையிலேயும் போக விரும்பல்லே... நான் போற இடமெல்லாம் பாதையா மாறணும்...!" போன்ற அவர் பேசும் வசனங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன.
கடந்த 1982-ம் ஆண்டு வெளியாகி ரஜினியின் வெற்றிப்பட வரிசையில் ஒன்றாக அமைந்த "தனிக்காட்டு ராஜா" படத்தை, 37 ஆண்டுகளுக்குப் பிறகு மறுரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, விரைவில் தனிக்காட்டு ராஜா திரைப்படம் மறுரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
"நான் யாரோட நிழல்லேயும் இளைப்பாறி சோம்பேறி ஆகமாட்டேன்... என் நிழல்லே சோம்பேரிங்க உருவாக அனுமதிக்க மாட்டேன்!" என்ற வசனத்துடன் ரஜினியின் தனிக்காட்டு ராஜா படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.