
சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் வராததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வரும் இவர், தமிழில் மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனும்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ என தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இதனாலேயே தெலுங்கு சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என யார் வந்தாலும் அவர்களை அவர் சந்திக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரெஜினா மீது கடும் கோபத்தில் இருக்கும் தெலுங்கு சினிமா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை திட்டி விமர்சித்து வருகின்றனராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.