பள்ளி ஆசிரியர்கள் குறித்து பல இழிவான கருத்துக்களைக் கொண்ட கதையை உருவாக்கி ‘வாத்தியார்களால்தான் நாடே நாசமாப் போச்சி’ என்று வசனங்களும் வைத்துள்ள ‘ராட்சசி’படத்தை தடை செய்வதோடு, ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் குறித்து பல இழிவான கருத்துக்களைக் கொண்ட கதையை உருவாக்கி ‘வாத்தியார்களால்தான் நாடே நாசமாப் போச்சி’ என்று வசனங்களும் வைத்துள்ள ‘ராட்சசி’படத்தை தடை செய்வதோடு, ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரியும் ‘ராட்சசி’படத்தைத் தடை செய்யக்கோரியும் ஒரு புகார் அளித்துள்ளார்.அதில்,...ஜோதிகா நடிப்பில் வெளி யாகி உள்ள “ராட்சசி” படத்தில் வாத்தியார்களால்தான் நாடே கெட்டு பேச்சு என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ராட்சசி’ படத்தை தடை செய்து ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.