அஜீத் ஏன் வரவேண்டும்? யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் சென்று போராடுங்கள்; கடுப்பான தயாரிப்பாளர்

Asianet News Tamil  
Published : May 11, 2018, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
அஜீத் ஏன் வரவேண்டும்? யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் சென்று போராடுங்கள்; கடுப்பான தயாரிப்பாளர்

சுருக்கம்

producer raise question against those who blamed the famous actor

பொதுவாகவே சமுதாயப்பிரச்சனைகள் சார்ந்த போராட்டங்கள், என வரும் போது, திரைத்துறையை சேர்ந்தவர்களும் அதில் பங்கேற்க வேண்டும் என நினைப்பது போராட்டக்காரர்களுக்கு வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடைபெற்றபோது ,அதில் அஜீத் ஏன் கலந்துகொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன் ,அவரை கடுமையாக விமர்சிக்கவும் செய்திருந்தனர்.

அஜீத் மிகப்பெரிய அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் மிகவும் அமைதியான நபர் பொதுவாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.

அவர் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் மீது அபிமானம் கொண்ட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசுகையில், அஜீத் போன்ற நல்ல மனிதரை திரைத்துறையில் நான் பார்த்ததில்லை. அவரது நற்குணங்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அஜீத்தை ஏன் இந்த பிரச்சனையில் இழுக்கிறீர்கள்? நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அந்த எம்.எல்.ஏக்களின் வீட்டுக்கு சென்று உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள் என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!