ஐதராபாத் போலீசுக்கு சல்யூட்... பெண் மருத்துவரை கொடூரமாக கொன்ற 4 பேர்... தோட்டா மூலம் நீதி வழங்கிய போலீஸ்... என்ன சொல்றாங்க தமிழ் திரைப்பிரபலங்கள்...!

Published : Dec 06, 2019, 01:52 PM IST
ஐதராபாத் போலீசுக்கு சல்யூட்... பெண் மருத்துவரை கொடூரமாக கொன்ற 4 பேர்... தோட்டா மூலம் நீதி வழங்கிய போலீஸ்... என்ன சொல்றாங்க தமிழ் திரைப்பிரபலங்கள்...!

சுருக்கம்

பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த திஷா கடந்த 27ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் திஷாவை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த குற்ற சம்பவம் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட சாமானியர்கள் வரை அனைவரையும் கொதிப்படையச் செய்தது. 

இதனிடையே விசாரணைக்காக திஷா எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்றவர்களை என்கவுண்டரில் போலீசார் சுட்டுத் தள்ளினர். இதனை கேள்விப்பட்ட தெலங்கானா மக்கள் என்கவுண்டர் நடத்திய போலீசாரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தீயாய் பரவி வரும் இச்செய்தி குறித்து திரைப்பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

ஐதராபாத் என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா, "அவர்கள் எளிதில் இறந்துவிட்டனர். பெண்களை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

 

"இறுதியாக நீதி வென்றது, தெலங்கானா காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றி" என விஷால் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

 

"இறுதியாக நீதி வழங்கப்பட்டது, ஆனால் இதுபோதாது. பாலியல் வன்கொடுமை செய்யும் ஒவ்வொருவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும். இதுபோன்ற தண்டனைகள் மட்டுமே பெண்களை கற்பழிக்கும் பைத்தியக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும். இதை சட்டமாக்குங்கள்" என்று பதிவிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். மேலும் அந்த டுவிட்டர் பதிவை பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார். 

 

"இதற்கு பெயர் தான் நீதி" என்று நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திஷாவிற்கு நீதி வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ட்விட்டரில் #JusticeForDisha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!