நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா..!

Published : Nov 19, 2020, 07:36 PM ISTUpdated : Nov 19, 2020, 08:29 PM IST
நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா..!

சுருக்கம்

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் இயக்கத்தியும் பாராட்டி வருகின்றனர்.   

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் இயக்கத்தியும் பாராட்டி வருகின்றனர். 

மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். சூர்யாவிற்கு இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறிவருகின்றனர். 

இந்நிலையில் சூர்யாவை தனது நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் வசந்த், சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு சூர்யாவிற்கு பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை.. நெடுமாறன் இராஜாங்கத்திற்கு , முதல் FRAME இல் இருந்து ROLLING TITLE ஒடுகிற கடைசி FRAME வரை உன் ஆட்சிதான். FRAME க்கு FRAME, SCENE க்கு SCENE உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த்திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இது இதுதான் உன் உச்சம் நெடுமாறன் இராஜாங்கமாக நீ நடிக்கவே சமி இப்போதைக்கு இல்லை இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது கணல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு, எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய். உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் HATS OFF TO YOU MY DEAR SURYA என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகந்து உச்சி முகந்து மகிழ்கிறேன் என மெய்சிலிர்ந்து பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் வசந்த்.

இந்த அறிக்கைக்கு, தற்போது சூர்யா, உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி   சார் என தெரிவித்துள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி