ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே... பழசை நினைத்து பார்த்திபன் வேதனை..!

Published : Nov 19, 2020, 03:56 PM IST
ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே... பழசை நினைத்து பார்த்திபன் வேதனை..!

சுருக்கம்

ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே என நடிகர்ரும், இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே என நடிகர்ரும், இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆண்கள் தினத்தை முன்னிட்டு அவரது ட்விட்டர் பதிவில், ‘’ஆண்+கள் தினமாம் இன்று! மீதி தினங்கள்? பெண்கள் தினங்களே! தென்னங்கள், பனங்கள் அதுவும் ஒரு மரத்துக் கள் உடலுக்கு நல்லதாம். (சுவைத்ததில்லை இதுவரை) தெ.கள், ப.கள் போல. ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே! ஒரு மரம் போல, ஒரே மனமாய் வாழ முடிவதில்லை. தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்குள் ஒரே ஒரு பெண்ணோ, ஒரு பெண்ணுடலின் மீதிக்குள் ஒரே ஒரு ஆணும் மட்டுமே அபூர்வம்! (அழகி’படம் போல அழகன்’ கதைகள் ஏராளம்) ஆண், பெண் பேதம் மனதிற்கு இல்லை. மனம் போல் வாழ்வோம்- யார் மனமும் நோகாமல்...’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

 

புதியபாதை படத்தில் தன்னுடன் நடித்த நடிகை சீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார் பார்த்திபன். பிறகு பார்த்திபனை பிரிந்த சீதா தனியாக வசித்து வருகிறார். அதனை மனதில் வைத்தே இந்த பதிவை பார்த்திபன் பகிர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

AK 64 Update: அஜித்துடன் முதன்முறையாக கைகோர்க்கும் சென்சேஷன் ஸ்ரீலீலா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
கார்த்திக்கின் ஐடியாவை கேட்டு ஷாக்கான சந்திரகலா – ரோகிணி அண்ட் சாமுண்டீஸ்வரி சைலண்ட் – கார்த்திகை தீபம்!