
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்குனர் பாலா. இந்த படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து, இந்த படத்தை மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கப்போவதாக, கூறி தேசிய விருது இயக்குனர் பாலாவை அவமானப்படுத்தியது.
நடிகர் விக்ரம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த படத்தை இயக்க சம்மதித்த பாலா இறுதியில், துருவின் வருங்காலத்தை மனதில் வைத்து இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறினார். ஆனால் பாலா வெளியேற்றம் குறித்து விக்ரம் அமைதி காத்தது ரசிகர்களை கோபமடைய செய்தது.
காரணம் பல படங்களில் நடித்தும், நட்சத்திர அந்தஸ்து பெறாமல் இருந்த விக்ரமுக்கு, 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து, திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலா.
தற்போது, பாலாவை விக்ரம் கைவிட்டாலும், இவரால் வளர்ந்த மற்றொரு நடிகரான சூர்யா வர்மா படத்தால் ஏற்பட்ட அவமானத்தால் துவண்டிருந்த பாலாவிற்கு தோள் கொடுத்துள்ளார்.
'வர்மா' படத்தில் இருந்து விலகியதும், புதிய திரைப்படத்தை இயக்க கதை எழுதுவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார் பாலா. தற்போது எழுதி முடிக்கப்பட்ட கதையை சூர்யாவிடம் கூற, உடனடியாக ஓகே கூறி பாலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.