
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏர்போர்ட் வந்த போது, அவர் அரசியல் அல்லது நாளை வெளியாக உள்ள 'தர்பார்' படம் குறித்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்து, பத்திரிகையாளர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், வந்த வேகத்தில் வணக்கம் மட்டுமே சொல்லிவிட்டு, ரஜினி வெளியேறிய செயல் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைத்ராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து, விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் குறித்தும், நாளை மிக பிரமாண்டமாக வெளியாக உள்ள 'தர்பார்' படம் பற்றியும் ஏதாவது பேசுவார் என பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட் முன்பு மைக்குடன் குவிந்திருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் வேகமாக நடந்து வந்து, பைட் கொடுப்பது போல் நின்று விட்டு வணக்கம் மட்டுமே சொல்லி அந்த இடத்தில் இருந்து நடையை கட்டினார். இவரது செயலை பார்த்து பத்திரிகையாளர்களே செம்ம ஷாக் ஆகிவிட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.