அன்பு சொக்க தங்கம்யா... "நடுராத்திரியில்கூட பணம் வேணும்னா போன் போட்டு கேட்கலாம்" சுளீர் ஆடியோ வெளியிட்ட சுந்தர்.சி...

 
Published : Nov 25, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
அன்பு சொக்க தங்கம்யா...  "நடுராத்திரியில்கூட பணம் வேணும்னா போன் போட்டு கேட்கலாம்" சுளீர் ஆடியோ வெளியிட்ட சுந்தர்.சி...

சுருக்கம்

Sundar c released audio for Anbusezhiyan

பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் மிரட்டியதன் காரணமாகவே தான் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தர்களோலை செய்துகொண்டார். அசோக் குமாரின் மரணத்தால் அமீர், விஷால், ஞானவேல் ராஜா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அன்புசெழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறும் நிலையில் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி, சீனு ராமசாமி உள்ளிட்டோர் ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜ குமாரன், “அன்புச் செழியன் பண்புள்ளவர்; மிகவும் உண்மையானவர். நான் அவரிடம் பணம் கடன் வாங்கியிருக்கிறேன். என் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அதை சரியாகத் திருப்பித் தந்துவிட்டேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், அவர் எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சி அன்புச் செழியனுக்கு ஆதரவாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 12 வருடங்களாகத் தயாரிப்பாளராக இருக்கிறேன். தயாரிப்பாளராக 'கிரி' என் முதல் படம். சினிமாவில் கந்து வட்டி என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இதுதான் உண்மை. கடந்த 8 வருடங்களாக நான் தயாரிக்கும் படங்களுக்கு அன்புவிடமிருந்துதான் பைனான்ஸ் வாங்கிவருகிறேன். அவர் ஏதோ எழுதி வாங்கிக்கொண்டார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் என்னிடமிருந்து அவர் எதையுமே எழுதி வாங்கியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து நான் தயாரித்து இயக்கும், “'கலகலப்பு 2' படத்துக்குக்கூட அவர்தான் பைனான்ஸ் செய்துள்ளார். செக் கொடுத்து இவ்வளவு பணம் என்று வாங்கியுள்ளோம். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டார் என்று மற்றவர்கள் சொல்வது எல்லாம் வடிகட்டிய பொய். எனது அனுபவத்தில் அப்படி எந்தவொரு விஷயமுமே கிடையாது. 

அதே போன்று, பட வெளியீட்டின்போது மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டுத்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று அன்புச் செழியன் எப்போதுமே நெருக்கடி கொடுத்ததே கிடையாது. சினிமா கஷ்டம் தெரிந்த பைனான்சியர் அன்பு. அவரிடம் இத்தனை ஆண்டுகள் பைனான்ஸ் வாங்கிவருகிறேன். 

இத்தனை ஆண்டுகளில் எந்தவொரு கசப்பான அனுபவம் கிடையாது. நடுராத்திரியில்கூடப் பணம் வேண்டுமானால் தொலைபேசியில் கேட்கலாம். எப்போதுமே அனுசரித்துப்போகக்கூடிய பைனான்சியர் அன்பு என புகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல என்றைக்குமே என் ஆதரவு அன்புச் செழியனுக்குதான்” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!